ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு கோவை காவல் துறை எச்சரிக்கை!!!

ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களுக்கு கோவை மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கோவையில் ஆம்னி பேருந்து ஓட்டுனர்கள் மது போதையில் வாகனத்தை இயக்குகிறார்களா என சோதனை செய்யப்பட்டு வருகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவை மாவட்டத்தில் இருந்து பெங்களூர், ஹைதராபாத், சென்னை, திருவனந்தபுரம் போன்ற மாநிலத்தின் தலை நகரங்களுக்கும், தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆம்னி பேருந்துகளை இயக்கம் ஓட்டுனர்கள் மது போதையில் வாகனத்தை இயக்குகிறார்களா என்பதைக் கண்டறிய, சோதனை மேற்கொள்ள கோவை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டு உள்ளார்.

அதன் அடிப்படையில் கோவை மாநகரில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் 95 ஆம்னி பேருந்துகளின் ஓட்டுநர்களிடம் மது அருந்திவிட்டு ஆம்னி பேருந்தை இயக்குகிறார்களா என சோதனை செய்யப்பட்டது.

வாகன தணிக்கையில், இரண்டு ஆம்னி பேருந்துகளின் ஓட்டுநர்கள் மது அருந்திவிட்டு ஆம்னி பேருந்தை இயக்கவிருந்தது போக்குவரத்து காவல் துறையின் சோதனையில் கண்டறியப் பட்டது. இந்த சோதனை நேற்று மாலை முதல் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர், ஆம்னி பேருந்துகளை இயக்க மாற்று ஓட்டுநர்களை ஏற்பாடு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் மது அருந்தவில்லை என்பதை உறுதிப்படுத்திய பிறகே பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களுக்கு கோவை மாநகர காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

கோவை மாநகர போக்குவரத்து காவல் நிலையங்களில் பணி புரியும் காவல் உதவி ஆய்வாளர்கள், காவல் ஆளிநர்களை கொண்டு 17 குழுக்கள் நியமிக்கப் பட்டது. இந்த குழுக்கள் சார்பில் நேற்று இரவு முதல் கோவை மாநகரில் சிறப்பு வாகன தணிக்கையானது மேற்கொள்ளப்பட்டது
இதில் உயர்தர கார்கள், உயர்தர இருசக்கர வாகனங்கள் உட்பட குடிபோதையில் வாகனங்களை இயக்கிய குற்றத்திற்காக மோட்டார் வாகன சட்டப்படி 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக கோவை மாநகர காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp