தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பகுதியில் கூட்டுறவு சங்கங்களில் எழுத்தர் ஆக பணிபுரிந்தவர்கள் கூட்டுறவு செயலராக பதவி உயர்வு.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஓட்டப்பிடாரம் பகுதியில் 21 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் ஒரு சில தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் கூட்டுறவு செயலர் பணியிடங்கள் காலியாக இருந்தது. இதை அடுத்து தற்போது தமிழக அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் எழுத்தராக பணிபுரிந்தவர்களுக்கு, பதவி மூப்பின் அடிப்படையில் கூட்டுறவு செயலராக பதவி உயர்வை அறிவித்தது.
அதன் அடிப்படையில் இன்று ஓட்டப்பிடாரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் செயலராக மாரிமுத்து பொறுப்பேற்றுக் கொண்டார். அதேபோல் புதியம்புத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு செயலராக கஸ்தூரி, கீழ முடிமன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளராக சீனிவாசன் உள்ளிட்டோரும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாட்ச்சியர் சுடலைமணி அனைத்து பணியாளர் சங்க நிர்வாகிகளும் கூட்டுறவு சங்க செயலாளருமான முருகன், தம்பிராஜ் கென்னடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-எஸ் நிகில் ஓட்டபிடாரம்.