பாலங்களுக்கு அடியில் மழைநீர்! – வாகனங்கள் செல்லலாமா..? எடுக்கப்பட்ட புதிய முயற்சி!!!

கோவை: வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னையில் கனமழை பெய்துள்ளது. அதேபோல கடந்த சில தினங்களாக  மாவட்டத்திலும் மழை பெய்து வருகிறது. கடந்த ஞாயிறு, திங்கள் கிழமைகளில் கனமழை பெய்தது. தொடர் மழை காரணமாக கோவையில் உள்ள குளங்கள் நிரம்பி உள்ளன. திருச்சி சாலை, அவிநாசி சாலை உள்ளிட்ட பல முக்கிய இடங்களில் வெள்ள நீர் தேங்கியது.
பல்வேறு பகுதிகளில் கால்வாய்கள் நிரம்பி பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. கோவை மாநரில் இரண்டு நாட்களில் பெய்த மழை காரணமாக, பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

சிவானந்தா காலனி-சாய்பாபா காலனி இடையே உள்ள கருணாநிதி நகர் ரயில்வே பாலம் அடிப்பகுதியில் மழை நீர் அதிகளவு தேங்கியதில் ஞாயிறு அன்று தனியார் பேருந்து ஒன்று சிக்கியது. தொடர்ந்து பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டன. அதேபோல திங்கள் அன்று மழை பெய்த நிலையில் இதே பாலத்தின் அடியில் நீர் தேங்கியதில் அரசு பேருந்து சிக்கியது. பயணிகள் பத்திரமாக கீழே இறக்கப்பட்டடனர். தீயணைப்பு துறையினர் கிரேன் வாகனம் மூலம் மழை வெள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்தை மீட்டனர்.

மழை காரணமாக மேட்டுப்பாளையம்-கோவை சாலை, கோவை-அவிநாசி சாலை, கோவை- பொள்ளாச்சி சாலை, கோவை-சத்தி சாலை, கோவை-பாலக்காடு சாலை என அனைத்து சாலைகளிலும் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாய்பாபா காலனி- சிவானந்த காலனி சாலை ரயில்வே பாலம் அடியில் இரண்டு தினங்களில் இரு பேருந்துகள் சிக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கோவையில் கடந்த சில தினங்களாக பெய்த மழையால் பாலங்களுக்கு அடியில் மழை நீர் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். இந்நிலையில் மழை வரும் போது மேம்பாலங்களுக்கு அடியில் வாகன ஓட்டிகள் செல்லலாமா, வேண்டாமா என்பதை அறிந்து கொள்ளும் வகையில் பச்சை, மஞ்சள், சிவப்பு வண்ணத்தில் கம்பங்கள் நடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக பேருந்து சிக்கி கொண்ட சாய்பாபா காலனி ரயில்வே தரைப் பாலத்தில் இந்த கம்பங்கள் நடப்பட்டுள்ளது. அனைத்து மேம்பாலங்களுக்கு அடியிலும் இது போன்ற கம்பங்கள் நட திட்டமிடப்பட்டுள்ளது.
மழை வரும் பொழுது இந்த கம்பத்தில் பச்சை நிறம் தெரிந்தால் வாகனங்கள் செல்லலாம். மஞ்சள் நிறம் தெரிந்தால் கவனத்துடன் வாகனங்களை இயக்க வேண்டும், இரு சக்கர வாகனங்கள் இயக்குவது சிரமம். சிவப்பு நிறம் தெரிந்தால் வாகனங்கள் செல்லக்கூடாது. மஞ்சள் நிறம் வரை நீரில் மூழ்கி, சிவப்பு நிறம் தெரிந்தால் போக்குவரத்து காவலர்கள் அப்பகுதியில் போக்குவரத்தை நிறுத்தி விடுவர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp