இலங்கை அருகே நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை western disturbance (வட இந்தியாவில் இருந்து கீழ இறங்கும் குளிர்ந்த காற்று) காரணமாக நிகழ்வு வடக்கு / வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து சென்னை அருகே 19ஆம் தேதி நிலை கொள்ளும். இதனால் வட தமிழகத்தில் கனத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கொங்கு மண்டலத்தை பொறுத்தவரை இந்த நிகழ்வில் இருந்து டைரக்ட் மழை எதிர்பார்க்க முடியாது. ஆனால் ஒரு சில இடங்களில் western disturbance தாக்கம் காரணமாக இடி மழைக்கு வாய்ப்புள்ளது. இது டிசம்பர் 19 – 22 தேதிகளில் ஆங்காங்கே ( வடக்கு கொங்கு மண்டலத்துக்கு அதிக வாய்ப்பு ) மழைக்கு வாய்ப்புள்ளது. இந்த மழை கண்டிப்பாக ஒரு சில இடங்களில் மட்டும் தான் இருக்கும். அதனால் மழையை எதிர் நோக்கி நம் கொங்கு மக்கள் காத்திருக்க வேண்டாம் என்று கோயம்புத்தூர் வெதர்மேன் சந்தோஷ் கிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-M.சுரேஷ் குமார்.