
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞா் அரங்கத்தில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது தமிழக முதல்வர் விஜய் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற மராத்தான் போட்டியில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் ஆபாச பாடலுக்கு குத்தாட்டம் போட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தவிர்க்கப்பட வேண்டியது மாணவர்களை நல்வழிப்படுத்தக்கூடிய வகையில் அமைச்சரின் செயல்பாடு இருக்க வேண்டும் அதற்குப் பின்பு ஒரு வீடியோவில் பார்க்கும் போது அமைச்சர் ஒரு குழந்தையின் காலை தடவுவதும் சொடக்கு எடுப்பது போன்ற அவர் செயல் அருவருக்கத்தக்கது அனுமதிக்க முடியாதது போக்சோ சட்டப்படி குற்றம் தான் எனவே அவர் மீது வழக்கு தொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது ஒரு கோரிக்கையாக உள்ளது.
அந்த இடத்தில் அமைச்சர் ஒரு பெண் ஆசிரியை மூலம் அந்த மாணவிக்கு உதவி செய்திருக்கலாம் அவ்வாறு இல்லாமல் ரீல்ஸ் எடுக்க வேண்டும் என்று நோக்கத்தில் செய்தாரா என்று தெரியவில்லை அந்த வீடியோவில் பார்த்தால் அமைச்சர் செய்கிறார் அந்த மாணவியின் தயக்கம் அசொளகரியம் தெரிகிறது அவர் ஒரு அமைச்சர் இதை முன் உதாரணமாக கொண்டு ஏராளமானவா்கள் பின்பற்றுவார்கள் பள்ளிகளின் நிலைமை மோசமாக சென்று கொண்டிருக்கிறது. அமைச்சராக இருப்பவர் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது வண்மையாக கண்டிக்கத்தக்கது அதேபோன்று தற்போது இன்னொரு வீடியோ வந்துள்ளது அதில் அமைச்சர் ஒருவர் மாத்திரையை நொறுக்கி கொடுத்துக் கொண்டு இருப்பதாக கூறுகிறார்கள் மாத்திரையை ஏடிஎம் காா்டை வைத்து நொறுக்கி டெமோ காட்ட சொல்லுங்க அதற்கு அவா் என்ன விளக்கம் கொடுத்து இருக்கிறார். அதற்கு ஹெட்டிங் போட்டுள்ளார்கள் தக் லைப் என்று தக் லைப் கெட்டிங் எதற்காக போடுகிறார்கள் என்றால் யாராலும் செய்ய முடியாத செயல் நான் ஒரு தில்லானா ஆள் அப்படி என்பது போல் தான் அந்த வீடியோவை அவர் பதிவிட்டுள்ளார் சரியான நேரத்தில் தமிழக முதல்வர் விஜய் போதைக்கு எதிரான மராத்தான் துவங்கிற்கும் போது இந்த வீடியோ வெளியே வந்துள்ளது.
அவரே எடுத்த வீடியோ தான் இன்றைக்கு அவர் சொல்கிறார் என்னுடைய குழந்தைக்கு மாத்திரை கொடுக்க அப்படி செய்தேன் என்று ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு யாருக்குமே மாத்திரை வழங்குவது கிடையாது சிரப்பு தான் கொடுப்பார்கள் அந்த வீடியோவை பார்த்தால் தெரியும் எங்கேயுமே மாத்திரை தெரியவில்லை குழந்தை தெரியவில்லை சரத்குமாரின் முகத்தில் குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்ற வருத்தமோ கவலையோ தெரியவில்லை எனவே அவர் ஒரு பொய்யான அறிக்கையை சொல்கிறார் இன்னொரு முறை வேண்டுமானால் அவர் தன்னை நிரூபிக்கலாம் மருத்துவ பரிசோதனை மூலம் நான் எந்த போதை மருந்தையும் எடுக்கவில்லை என்பதை அவர் நிரூபிக்கலாம் இப்படி ஒரு நாட்டை வழி நடத்தக்கூடிய முதலமைச்சரின் கீழ் செயல்படும் அமைச்சர்கள் எல்லாம் இப்படி இருந்தால் நமது தமிழ்நாடு எங்கே போகும் தமிழ்நாட்டைக் காப்பாற்ற வேண்டும்.
தமிழ்நாட்டை வளர்ச்சியடைய செய்ய வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஆசை தமிழ்நாடு வளர்ச்சி பாதையில் செல்ல வேண்டும் முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் 11.9 சதவீத வளர்ச்சியை காண்பித்தார் இன்றும் மேன்மேலும் வளர வேண்டும் என்பது தான் திமுகவின் நோக்கம் போதை தடுப்பு படை அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் கூறினார் ஆனால் இதுவரை போதை தடுப்பு படை அமைக்கப்படவில்லை அமைச்சர் சரத்குமார் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட்ரமணா நியமனம் குறித்து அனைவரும் கண்டித்து வருகிறார்கள் மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் பாலமாக இருந்து செயல்படக்கூடிய ஒரு பதவியை கர்நாடகாவை சேர்ந்தவரை எப்படி போடுவீர்கள் கன்னடக்காரரை எப்படி போடுவீர்கள் அவர் காவிரி பிரச்சனையில் யாருக்கு சப்போர்ட் செய்வார் தமிழ்நாட்டிற்கு கர்நாடகாவிற்கா அதனால் இவையெல்லாம் தவிர்க்கப்பட வேண்டும் வெள்ளை அறிக்கை எல்லாம் வெற்று அறிக்கை வேளாண்மை துறையில் வெள்ளை அறிக்கை ஏற்கனவே கொடுத்த நிதித்துறை வெள்ளை அறிக்கை மின்சாரத்துறை வெள்ளை அறிக்கை ஏற்கனவே நிதி துறை தொடர்பாக முன்னாள் தமிழக முதல்வர் நிதி அமைச்சர் எல்லோரும் சட்டமன்றத்திலேயே தெளிவாக தெரிவித்து இருக்கிறார்கள் வெள்ளை அறிக்கை என்பது யாரை ஏமாற்ற பண்ணுகிறார்கள் என தெரியவில்லை
தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் தமிழகத்தில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் மோதிரம் என்று தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தார் ஆனால் தற்போது அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு என்று கூறுகிறார் அதிலும் வருமான வரம்பு ஒன்றை சொல்கிறார் அவர் சொல்வது ஒன்று செய்வது ஒன்று தேர்தல் பிரச்சாரமும் அது வேற இது வேற என்று போய்க்கொண்டிருக்கிறார் அதே போன்று தான் விவசாயிகள் நிலைமையும் டெல்டா விவசாயிகள் வேதனை தெரிவிக்கிறார்கள் கடனை முழுவதுமாக தள்ளுபடி பண்ணவில்லை ஜூன் 12 காவிரியில் இருந்து தண்ணீர் திறக்கவில்லை கரண்டும் வரவில்லை போராட்டத்தை தூண்டுவது எதிர்க்கட்சி தான் என தமிழக முதல்வர் கூறுகிறார் அவர் சொல்வதை கேட்டு விவசாயிகள் நொந்து வேதனை அடைந்துள்ளனர் விவசாயிகள் முக்கியமானவர்கள் அவர்கள் சேற்றில் கார் வைத்தால் தான் நான் சோற்றில் கை வைக்க முடியும் ஆனால் இவர்களுடைய அமைச்சர் என்ன சொல்கிறார்கள்.
விவசாயத்தை விட விளையாட்டு துறை மேலானது என்கிறார்கள் இப்படி நாம் சொல்லிக் கொண்டே போகலாம் பார்ட்டிபன்ட் என்பது லாட்டரி அதிபர் மார்ட்டின் எல்லா கட்சிக்குமே தேர்தல் நேரத்தில் நன்கொடை வழங்கும் வழக்கம் இருக்கிறது மாற்றி பேசுகிறார்கள் புரியாமல் பேசுகிறார்கள் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியது பொய்யான தகவல் காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா 21 கிலோமீட்டர் தூரம் ஓடி இருக்கிறார் சீன் போட வேண்டும் ரீல்ஸ் எடுக்க வேண்டும் என்பதற்காக மைக்கில் எதையாவது பேசி வருகிறார்கள் மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் மக்கள் அறிவார்கள் தமிழ்நாடு எதை நோக்கி பயணிக்கிறது என்ற வினாவோடு மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் வருவாய்த்துறை அமைச்சர் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையில் ஜாதி பெயர் இருக்கும் என்று அறிவித்துள்ளது.
வன்மையாக கண்டிக்கத்தக்கது பள்ளிக்கூடம் என்றாலே அதில் ஜாதி மத இன மொழி ஏழை பணக்காரன் எந்த ஒரு வேறுபாடும் இருக்கக்கூடாது அதனால்தான் பள்ளிகளில் யூனிபார்ம் அறிமுகப்படுத்தப்பட்டது பெருந்தலைவர் காமராஜர் சீருடை அறிமுகப்படுத்தும் போது பள்ளிகளில் ஏற்ற தாழ்வு இருக்கக் கூடாது மாணவகள் ஒன்றாக பழக வேண்டும் எனவே அமைச்சர் அவர்கள் அடையாள அட்டையில் ஜாதி பெயர் வைப்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும் ஜாதி பெயர் அடையாள அட்டையில் இடம்பெருமானால் அதன் நிச்சயமாக தவிர்க்கப்பட வேண்டும் இதுபோன்று எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற முடிவை இந்த அரசு எடுக்கக் கூடாது எனவே அதை அமைச்சர் மீண்டும் விளக்கிட வேண்டும் ஜாதி அடையாளம் இடம் பெற வேண்டும் என்றால் அது தேவையில்லை அடையாள அட்டையில் ஜாதி பெயரை குறிப்பிடும் செயலை வன்மையாக கண்டிக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் தற்போது 40 நாட்களில் 200 பாலியல் குற்றங்கள் நடந்துள்ளன தளபதியின் ஆட்சியில் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக புகார் அளிக்கும் நிலைமையை நாங்கள் உருவாக்கினோம் யார் புகார் அளித்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுத்து வந்தோம்
எல்லாரும் குழந்தைகளிடம் பேட் டச் குட் டச் என்று சொல்வார்கள் ஆனால் எங்களுடைய ஆட்சி காலத்தில் நோ டச் அதை எங்களுடைய கருத்தாக அனைத்து இடத்திலும் வலியுறுத்தினோம் எனவே தமிழக அரசு குழந்தைகள் பாதுகாப்பில் அதிக கவனம் எடுத்து எந்த பள்ளியிலும் இதுபோன்ற நிலை நடக்காத நிலையை ஏற்படுத்த வேண்டும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழாவை நாங்கள் சிறப்பாக கொண்டாடுவோம் அவர் சிலைக்கு மாலை அணிவிப்போம் யாரும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் கூறினாா்.
பேட்டியின் போது மாவட்ட துணைச்செயலாளர் ராஜ்மோகன்செல்வின், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மண்டலத்தலைவா் வக்கீல் பாலகுருசுவாமி, பகுதி செயலாளர் ரவீந்திரன், சுரேஷ்குமாா், ராமகிருஷ்ணன், ஜெயக்குமாா், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமாா், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி, வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மற்றும் முரளிதரன், மணி அல்பட் ஆகியோா் உடனிருந்தனா்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-பரணி பாலா.




