இளம் தலைமுறையினர் தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்ள புத்தக வாசிப்பு அவசியம்!!

“இளம் தலைமுறையினர் தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்ள புத்தக வாசிப்பு அவசியம்” என்று சிந்தனை கவிஞர் கவிதாசன் தெரிவித்தார்.சிந்தனைக் கவிஞர் கவிதாசனின் நான்கு நூல்கள் அறிமுக விழா கோவையில் நடைபெற்றது.இளம் தலைமுறையினர் தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்ள புத்தக வாசிப்பு அவசியம் என விழாவில் சிந்தனை கவிஞர் கவிதாசன் உரையாற்றினார்.

கோவையில் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் எழுதிய ‘வெற்றிப் படிக்கட்டுகள்’, ‘வெற்றியின் விதைகள் 100’, ‘சிகரம் தொடு’ மற்றும் ‘வெற்றிப்பாதை’ ஆகிய நான்கு நூல்களின் அறிமுக விழா கோவை காந்திபுரத்தில் உள்ள ஆர்.வி. ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

விழாவிற்கு கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ் துறைத் தலைவர் முனைவர் விஸ்வநாதன் வரவேற்புரையாற்றினார். கோவை ஞான சஞ்சீவனம் குருகுலம் நிறுவனர் ஸ்ரீ சசிகுமார் வாழ்த்துரை வழங்கினார். வெற்றிப்பாதை’ நூலுக்கு கோவை பயனீர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சச்சிதானந்தர், இதிகாச மாமணி முனைவர் முருகேசன் அறிமுக உரையாற்றினர்.

மன்னார்குடியைச் சேர்ந்த தமிழ் இலக்கிய ஆய்வறிஞரும் நூலாசிரியருமான பத்மாவதி, ‘வெற்றிப் படிக்கட்டுகள்’ நூல் குறித்தும், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி தமிழாசிரியர் முனைவர் கருணாநிதி, ‘வெற்றியின் விதைகள் 100’ நூல் குறித்தும் அறிமுக உரையாற்றினர். அதே பள்ளியின் தமிழாசிரியர் முனைவர் பொன். சங்கர், ‘சிகரம் தொடு’ நூல் குறித்து அறிமுக உரையாற்றினார்.

விழாவில் நூல்களின் எழுத்தாளரும் ரூட்ஸ் நிறுவனங்களின் இயக்குநரும், சிந்தனைக் கவிஞருமான டாக்டர் கவிதாசன் பேசுகையில், இன்றைய தனிக்குடும்ப வாழ்க்கை முறையில் இளம் தலைமுறையினர் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் இருந்த வழிகாட்டுதலும், எதையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவமும் தற்போது குறைந்து வருவதால், சில நேரங்களில் இளைஞர்கள் ஆபத்தான முடிவுகளை எடுக்கும் நிலை ஏற்படுகிறது என்றார்.

எனவே, இளம் தலைமுறையினரிடம் தன்னம்பிக்கையையும் மன உறுதியையும் வளர்க்க வேண்டியது அவசியம் என்றும், குறிப்பாக தன்னம்பிக்கை, தலைமைப் பண்பு மற்றும் வாழ்க்கையை எதிர்கொள்ளும் திறனை வளர்க்கும் புத்தகங்களை தொடர்ந்து வாசிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

“தொட்டுத் தொட்டுப் பார்த்தால் காகிதம்; தொடர்ந்து படித்தால் வெற்றியின் ஆயுதம்” என்ற கருத்தை முன்வைத்த கவிதாசன், புத்தக வாசிப்பு அறிவை வளர்ப்பதோடு மட்டுமின்றி, வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் பக்குவத்தையும் தன்னம்பிக்கையையும் வழங்கும் என தெரிவித்தார். நான்கு நூல்களின் அறிமுக விழாவில் இலக்கிய ஆர்வலர்கள், கல்வியாளர்கள், வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

-சீனி,போத்தனுர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts