கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை திவான்சாபுதூர் கிழவன்புதூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக உணவு கடத்தல் தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது திவான்சாபுதூர் நடுகன்னியம்மன் கோவில் அருகில் பாப்பாத்தி பாலம் மறைவான பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் வைக்கப்பட்டு இருந்தன.
இதுகுறித்து போலீசார் விசாரணையில் ஆனைமலை பகுதியை சேர்ந்த மனோஜ்குமார் (வயது 21) என்பது தெரியவந்தது. மேலும் ஆனைமலை பகுதியில் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி அதை கேரளாவிற்கு கடத்தி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் மனோஜ்குமாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 1100 கிலோ ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்களின் குரல்
என்னதான் உணவு கடத்தல் பிரிவு அதிகாரிகள் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தும் நபர்களை அடிக்கடி பிடித்தாலும் ஒரு சிலரை கண்டும் காணாமல் விட்டு விடுவது ஏன் என்ற கேள்வியை முன்வைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-M.சுரேஷ்குமார்.