கோவையில் ஒரே நாளில் 64 பேருக்கு கொரோனா தொற்று! அதிர்ச்சியில் மக்கள்!!

கோவை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது…..

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இதனால், கோவை மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவையில் மொத்த பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3,30,579 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் கோவையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,617 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வந்த 31 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் கோவையில் இதுவரை கொரோனா தொற்று சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,27,600 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 247 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

-இளம் தந்தி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp