ஒட்டப்பிடாரம் நாரைக்கிணறு ரயில் நிலையத்தில் ரயில் நின்று செல்லும்! தெற்கு ரயில்வே அறிவிப்பு!!

தூத்துக்குடியில் இருந்து நெல்லை இடையே இயக்கப்பட்டு வந்த முன்பதிவு இல்லாத ரெயில் ஒட்டப்பிடாரம் அருகில் உள்ள நாரைக்கிணறு ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே துறை அறிவித்துள்ளது.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: – தூத்துக்குடியில் இருந்து நெல்லைக்கும், நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்கும் முன்பதிவு இல்லாத ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில்கள் மணியாச்சி அருகே உள்ள நாரைக்கிணறு ரெயில் நிலையத்தில் நின்று செல்வதற்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்து வந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனை தொடர்ந்து பயணிகளின் வசதிக்காக வருகிற 1-ந் தேதி முதல் தூத்துக்குடி-நெல்லை-தூத்துக்குடி இடையே இயக்கப்படும் ரெயில்கள் நாரைக்கிணறு ரெயில் நிலையத்தில் நின்று செல்லும். நேரம் விவரம் அதன்படி தூத்துக்குடியில் இருந்து நெல்லை செல்லும் சிறப்பு ரெயில் இரவு 7:15 மணிக்கும், நெல்லையில் இருந்து தூத்துக்குடி செல்லும் சிறப்பு ரெயில் காலை 8 மணிக்கும் நாரைகிணறு ரெயில் நிலையத்துக்கு வந்து புறப்பட்டு செல்லும்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

இதனை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது. மேலும் குடிநீர் வசதி உட்பட அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ஓட்டப்பிடாரம், முனியசாமி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp