ஓட்டப்பிடாரம் அருகே தொழிலாளி மர்மமான முறையில் இறப்பு ! போலீசார் தீவிர விசாரணை.!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா மேலத்தட்டப்பாறை கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் வேல்முருகன் (வயது 27). இவர் கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் காலையில் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மேலமுடிமன் கிராமத்தில் உள்ள தனது உறவினர் அய்யனார் கோவிலில் மொட்டை போடும் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.

அவர் சென்று நீண்டநேரமம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி பாலம்மாள் அவரது உறவினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் அவரது உறவினர்கள் அப்பகுதியில் தேடினர். ஆனால் அவரை பற்றி தகவல் தெரியவில்லை. இந்த நிலையில் நேற்று காலையில் தேடியபோது, அவரது உடல் மேலமுடிமன் கிராமம் அருகே உள்ள பாலத்தில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அங்கு சென்று பார்த்தபோது பாலத்துக்கு அடியில் அவர் மர்மமான முறையில் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரது மர்மச்சாவு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-முனியசாமி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp