ஓட்டப்பிடாரம் அருகே தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வழக்கில் ஒருவர் கைது!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பகுதியில் கடந்த ஆண்டு ஜீலையில் தொடர்ச்சியாக 5 பேரிடம் ஒரு கும்பல் வழிப்பறியில் ஈடுபட்டது. ரொக்க பணம், இருசக்கரவாகனம், செல்போன் உள்ளிட்ட பொருள்களை வழிப்பறி செய்தனர்.

இது குறித்து ஓட்டப்பிடாரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலை தேடி வந்தனர். இதில் 7 பேர் கொண்ட கும்பல் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

இதையெடுத்து 7 பேர் கும்பலில் 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மீதமுள்ள 3பேரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் மணியாச்சி டி. எஸ். பியாக சமீபத்தில் பொறுப்பு ஏற்றுக்கொண்ட லோகேஸ்வரன், நிலுவையில் உள்ள வழக்கில் கைது செய்யப்படமால் இருக்கும் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் அறிவுறுத்தினார்.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதையெடுத்து போலீசார் குற்றவாளிகள் கைது செய்யப்படமால் இருக்கும் வழக்குகளில் கவனம் செலுத்தினார். இதில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட தலைமறைவாக இருந்த வழக்கில் கோவில்பட்டி பாரதிநகரைச் சேர்ந்த செல்லப்பாண்டின் என்பவரது மகன் மகாராஜன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள சோலையப்பன், கரண் ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp