கோவை பைபாஸ் சாலை இனிமே 2 இல்ல, 4 ஆகப் போகுது! மெகா ஏற்பாடு!!

தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக கோவை திகழ்கிறது. இங்கு இடம்பெயறும் பொதுமக்கள், தடம் பதிக்கும் புதிய நிறுவனங்கள் என கிடுகிடுவென மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதையொட்டி போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது.

இதற்கான மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதிய பாலங்கள் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன இதற்கிடையில் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் உடன் இணைக்கப்பட்டுள்ள புறவழிச்சாலைகளை (Bypass) மேம்படுத்தும் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. அந்த வகையில் 2010ஆம் ஆண்டு 850 கோடி ரூபாய் செலவில் செங்கப்பள்ளி முதல் வாலையாறு வரை விரிவாக்கம் செய்யும் பணிகள் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் நீலாம்பூர் முதல் மதுக்கரை வரையிலான பாதை மட்டும் விடுபட்டது.

இதனை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் தொடர் கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர். தினசரி அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல், டிவைடர்கள் இல்லாததால் ஏற்படும் ஆபத்துகள் என சிக்கல்கள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் நீலாம்பூர் முதல் மதுக்கரை வரையிலான இரண்டு வழித்தடத்தை நான்கு வழித்தடமாக மாற்ற முடிவு செய்யப்பட்டது.

இதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் நிதித் தேவை ஆகியவை குறித்து ஆய்வு செய்வது தொடர்பாக தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்கள் மூலம் விரிவான திட்ட அறிக்கை (DPR) தயார் செய்ய திட்டமிடப்பட்டது. இந்நிலையில் மாநில நெடுஞ்சாலைத் துறை தரப்பில் இருந்து முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்வது தொடர்பாக டெண்டர் கோரப்பட்டு சமீபத்தில் இறுதி செய்யப்பட்டு விட்டது.

அடுத்த 6 மாதங்களில் முழு அறிக்கை கிடைத்துவிடும். அதன் அடிப்படையில் பணிகள் தொடங்கப்படும். நீலாம்பூர் முதல் மதுக்கரை வரை சர்வீஸ் சாலைகளுடன் கூடிய 4 வழிச்சாலை அமைக்கப்படும். மேம்பாலச் சாலைகள் மற்றும் மேம்பாலங்கள் ஆகியவையும் மேம்படுத்தப்படும். இதற்கு 400 கோடி ரூபாய் அளவிற்கு செலவாகும் என்று தெரிகிறது.

இருப்பினும் விரிவான திட்ட அறிக்கை கிடைத்தவுடன் தான் மதிப்பீடு குறித்து இறுதியாக சொல்ல முடியும் என்கின்றனர். இந்த புறவழிச்சாலை ஆனது வேகமாக வளர்ந்து வரும் பகுதியில் அமைந்துள்ளது. தினசரி அதிகப்படியான வாகனங்கள் கடந்து செல்கின்றன. குறிப்பாக கேரளாவிற்கு செல்லும், அங்கிருந்து வரும் வாகனங்கள் இந்த வழித்தடத்தையே பயன்படுத்துகின்றன.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அதுமட்டுமின்றி கல்லார் பாலம் அருகே கோவை – ஊட்டி – குண்டல்பேட்டை பகுதியில் யானைகள் வழித்தடம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஆய்வறிக்கை முழுமையாக கிடைத்தவுடன் மதிப்பீடுகள் குறித்த தகவல்கள் வெளியாகும். அதாவது, வாகனங்கள் மற்றும் யானைகள் வழித்தடம் ஒன்றுக்கு ஒன்று பாதிக்காத வகையில் 2.4 கிலோமீட்டர் தூரத்திற்கு பணிகள் மேம்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp