மதுரை மாவட்டம், சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் அகமது என்பவரின் மகன் சாகுல் அமீது(45). சந்தைகளில் காய்கறி வியாபாரம் செய்து வருபவர்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இவர் நேற்று காரைக்குடியில் சந்தை வியாபாரத்தை முடித்துவிட்டு ஒரு சரக்கு வாகனத்தில் சொக்கலிங்கபுரத்தை நோக்கி வந்திருக்கிறார். அப்போது, புதுவயலைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்குச் சொந்தமான விறகு ஏற்றப்பட்ட லாரி ஒன்று காளாப்பூரில் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்திருக்கிறது.
சாகுல் அமீது வந்த சரக்கு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, நின்று கொண்டிருந்த விறகு பாரம் ஏற்றப்பட்டிருந்த லாரியின் பின்புறம் மோதியதில் சாகுல் அமீது சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த எஸ்.வி மங்கலம் காவல்துறையினர், சாகுல் அமீதின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக சிங்கம்புணரி அரசு தாலுகா தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த எஸ்.வி மங்கலம் காவல் துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.