கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 27/ 8 /2022. சனிக்கிழமை நேற்று அண்ணா பேருந்து நிலையம் முன்பு தமிழின உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த பிரச்சாரத்தில் தமிழகத்தில் வடமாநிலங்களில் இருந்து குவியும் வட மாநில தொழிலாளர்களால் சொந்த நாட்டில் அகதிகளாக தமிழர்கள் தமிழ்நாட்டில் ஒன்றிய அரசின் வேலைகளில் வடநாட்டினர் திட்டமிட்டு திணிக்கும் பாரதிய ஜனதா அரசை கண்டித்து
வருகிற 5/ 9/ 2022 திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் தலைமை தபால் நிலையம் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த போராட்டத்தை வலுப்படுத்தும் விதமாக இந்த பிரச்சாரம் நடைபெறுவதாகவும் தெரிவித்தனர்.
இந்த நிகழ்வில் தமிழின உணர்வாளர்கள் கூட்டமைப்பைச் சார்ந்த தோழர்கள் போராட்டத்தின் அவசியம் குறித்து உரை நிகழ்த்தினார்கள்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-அலாவுதீன், ஆனைமலை.