பொள்ளாச்சி நேதாஜி இளைஞர் பேரவை சார்பில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு குப்பைக் கூடை வழங்கப்பட்டது!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆக.16 பொள்ளாச்சி நேதாஜி ரோட்டில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை சார்பில் பள்ளியில் உள்ள 40 வகுப்பறைகளுக்கும் 40 பிளாஸ்டிக் குப்பைக்கூடைகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் நேதாஜி இளைஞர் பேரவை தலைவர் வெள்ளை நடராஜ் தலைமை தாங்கினார். நிகழ்வில் பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் கலந்து கொண்டு குப்பைக் கூடைகளை வழங்கி “என் குப்பை என் பொறுப்பு” என்பது குறித்து மாணவிகளிடையே வலியுறுத்தி பேசினார்.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியர் அ.கோமதி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ச.தர்மராஜ் ,நகரமன்ற உறுப்பினர்கள் கந்த மனோகரி கவிதா பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் ஜெய்னு லாப்தீன் காளிமுத்து. கவிஞர் மு.முருகானந்தம். மற்றும் நேதாஜி இளைஞர் பேரவை அப்துல் சமது உள்ளிட்ட பேரவை நிர்வாகிகள் உறுப்பினர்கள் பெற்றோர்கள் மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp