கோவை மாவட்டம் போத்தனுர் செட்டிப்பாளையம் சாலையில் ஆறுபடை நகர் பேருந்து நிறுத்த அருகில் பன்றிகள் கூட்டம் போக்குவரத்திற்கு, பொது மக்களுக்கு பெரும் ஆபத்தையும் அச்சுறுதலையும் ஏற்படுத்தி வருகிறது.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இப்பகுதியில் சுமார் 500 இக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது, இங்குள்ள மக்கள் வீட்டில் உள்ள குப்பைகள் கழிவுகள் குப்பை தொட்டியில் போடாமல்,சாலையில் வீசி செல்கின்றனர். இதனை தேடி பன்றிகள் கூட்டம் கூட்டமாய் வருகிறது.இதனால் போக்குவரத்தும் இடையூறு ஏற்பட்டு சாலையில் பன்றிகள் அங்கும் இங்குமாய் அலைகிறது.
அப்பகுதியில் உள்ள மக்கள் குப்பைகளை குப்பை தொட்டியில் இட வேண்டும்,இதை பேரூராட்சி கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும என வாகன ஓட்டிகள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஆரோக்யராஜ், வெள்ளலூர்.