கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகையை அடுத்த வெள்ளிக்குப்பம் பாளையத்தில் டாஸ்மாக் மதுபான கடை உள்ளது.
அதன் அருகே உள்ள பாரில் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் கண்டணப் பட்டியைச் சேர்ந்த காளையப்பன் (வயது 27) என்பவர் ஊழியராக கடந்த 3 மாதமாக வேலை பார்த்து வந்தார்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த நிலையில் பாரின் வெளியே காளையப்பன் சமையல் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த அடையாளம் தெரியாத சில மர்ம ஆசாமிகள் காளையப்பனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுவிட்டனர்.
படுகாயம் அடைந்த காளையப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து சிறுமுகை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற சிறுமுகை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-அருண்குமார், கிணத்துக்கடவு.