கோவை மாவட்டம் பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டி பகுதியைச் சேர்ந்த பெயிண்டர் சுரேஷ் மற்றும் மரப்பட்டை தந்தை பெரியார் வீதியை சேர்ந்த கவிதா ஆகிய இருவரும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்து வந்துள்ளது மேலும் குடிப்பழக்கம் இருந்ததால் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்த நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தனது மகன்களுடன் கவிதா தாய் வீட்டில் தஞ்சமடைந்தார்.
இந்நிலையில் மாமியார் வீட்டுக்கு சென்ற சுரேஷ் தன்னுடன் வாழ வருமாறு மனைவியை அழைத்துள்ளார். கவிதா வர மறுத்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த சுரேஷ் தன்னை மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவியை குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.
படுகாயமடைந்த கவிதாவை பொள்ளாச்சி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் வரும் வழியிலே உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த பொள்ளாச்சி மகாலிங்கபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு சுரேஷ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-M.சுரேஷ்குமார்.