கட்டணம் செலுத்துவதில் தகராறு! டோல்கேட்டில் முடியைப் பிடித்து அடித்துக் கொண்ட பெண்கள்!!

மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் பிம்பல்காவ் டோல்கேட்டில் காரில் வந்த ஒரு பெண் வாகன நுழைவு வரி செலுத்துவது தொடர்பாக டோல்கேட் பெண் ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியது. டோல்கேட் பெண் ஊழியர் எழுந்து வந்து அந்தப் பெண்ணுடன் நேருக்கு நேராக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருவரும் ஒருகட்டத்தில் அடிதடியில் இறங்கினர். இரு பெண்களும் முடியைப் பிடித்துக்கொண்டு ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டனர். அவர்கள் ஒருவருக்கொருவர் முகத்தில் குத்திக்கொண்டனர். அதில் ஒரு பெண் `சேலையை கிழித்துவிடுவேன்!’ என்று மிரட்டினார். அவர்களின் சண்டையை ஆரம்பத்தில் அங்கு இருந்த யாரும் பிரித்துவிட முன்வரவில்லை.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அதோடு பெண்களின் சண்டையை தங்களது மொபைல் போனில் வீடியோ எடுப்பதில் குறியாக இருந்தனர். இறுதியில் அந்தப் பெண்களை அங்கிருந்தவர்கள் பிரித்துவிட்டனர். அவர்கள் இரண்டு பேரும் சண்டையிட்டுக்கொண்ட வீடியோ யாரோ சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். அது தற்போது வைரலாகி இருக்கிறது.

கடந்த மாதம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் டோல்கேட்டில் வாகன வரி செலுத்தாமல் செல்ல முயன்ற வாலிபரது வாகனத்தை செல்லவிடாமல் தடுத்த பெண் ஊழியரை அந்த வாலிபர் கன்னத்தில் ஓங்கி அடித்தார். உள்ளூரைச் சேர்ந்தவர் என்பதால் தன்னைக் கட்டணம் இல்லாமல் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று அந்த வாலிபர் கேட்டுக்கொண்டார். ஆனால் அவர், தான் உள்ளூர் பிரஜை என்பதை நிரூபிக்க எந்தவித ஆவணமும் காட்டவில்லை. பெண் ஊழியரை அடித்தது தொடர்பாக போலீஸில் புகார் செய்யப்பட்டது.

-செந்தில் முருகன், சென்னை தெற்கு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp