ஆக்கிரமிப்புகளை பற்றி எந்த தகவலும் எங்களிடம் இல்லை – தாம்பரம் மாநகராட்சி!!!

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட, குரோம்பேட்டை, மண்டலம் 2இல் வைஷ்ணவா பெண்கள் கல்லூரி சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை குறித்து மாநகராட்சியிடம் தகவல் அறியும் உரிமை சட்டம் (RTI) மூலம் கோரப்பட்ட தகவல்களுக்கு மாநகராட்சி எங்களிடம் எந்த தகவலும் இல்லை என பதில் அளித்துள்ளது.

அதேபோல் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அகற்றுமா என்று கேட்டதற்கு ” மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தமிழ்நாடு பொது வளாக சட்டம் 1975 படி அகற்ற வேண்டும்” என பதில் அளித்துள்ளது.

இதேபோல் டாக்டர் ராஜேந்திர பிரசாத் சாலையில் கடந்த மாதம் பள்ளி செல்லும் சிறுமி பேருந்தில் அடிபட்டு மரணம் அடைந்தார் அதன் பிறகு கண்துடைப்பாக ஆக்கிரமிப்புகளை

அகற்றுவது போல் மாநகராட்சி ஒரு நாள் மட்டும் கடைகளின் முன்னே உள்ள போர்டுகளை அகற்றி விட்டு சென்றது.

இதனைப் பற்றி சமூக ஆர்வலரிடம் கேட்ட பொழுது இங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவோம் என்று காகிதத்தில் மட்டுமே எழுதி வைத்துள்ளனர்.

மாநகராட்சி பொறுப்பில் இருப்பவர்கள் கையூட்டு பெற்றுக் கொண்டு இது போன்ற ஆக்கிரமப்புகளை அகற்றாமல் தட்டிக் கழித்து வருகின்றனர் எனக் கூறினார்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

இதுபோன்ற ஆக்கிரமிப்புகளை எல்லாம் அகற்றி இனிமேலும் எந்த உயிரும் போகாமல் தங்களை பாதுகாக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

-செந்தில் முருகன், சென்னை தெற்கு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp