தூத்துக்குடி அருகே ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகே உள்ள சிறுபாடு கிராமம், பாத்திமா நகரில் ஒரிசா மாநிலத்தை சேர்ந்த சிலர் தங்கியுள்ளனர். இவர்கள் முறப்பநாடு அருகே கொம்புகாரநத்தம் கிராமத்தில் உள்ள ஒரு தேயிலை நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்கள். அந்நிறுவனத்தில் ஒடிசா மாநிலம், கோபிந்தாபூர் பகுதியைச் சேர்ந்த கந்தப் பெஹெரா மகன் துசாபந்த் பெஹெரா (24) என்பவர் டெக்னீஷியனாக பணிபுரிந்து வந்தார்.
இவர் இன்று காலை பாத்திமா நகரில் உள்ள வீட்டில் தலையில் பலத்த காயத்துடன் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவரை கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
– முத்தரசு கோபி ஶ்ரீவைகுண்டம்.