தூத்துக்குடியில் மிளகாய் பொடித் தூவி கணவன் மனைவி வெட்டிக்கொலை!! பெரும் பரபரப்பை ஏற்படுத்திய செய்தி!!

தூத்துக்குடியில் மிளகாய் பொடித் தூவி கணவன் மனைவி வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி அண்ணாநகர் 6வது தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் ராம்குமார் (வயது 42) இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மாரியம்மாள் (வயது 39) இந்த தம்பதிகளுக்கு திருமணம் ஆகி 13 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லாததால் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மாரியம்மாளின் உடன் பிறந்த அண்ணன் முருகேசன் 50 என்பவருக்கும், மாரியம்மாளுக்கும் சொத்து தகராறு இருந்து வந்தது. இந்த தகராறில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முருகேசன் சொத்துக்கள் அனைத்தும் மாரியம்மாள் பெயருக்கு மாற்றப்பட்டதாம்.

இதனால் முருகேசன் மற்றும் அவரது மகன் மகேஷ் (வயது 20) இருவரும் கடும் ஆத்திரமடைந்தனர். இதனால், இருவரும் சேர்ந்து ராம்குமார் மற்றும் அவரது மனைவி மாரியம்மாள் 2 பேரையும் கொலை செய்ய திட்டமிட்டனர்.

இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் ராம்குமார் தனது மோட்டார் பைக்கில் அண்ணா நகர் 6வது தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முருகேசன் அவரது மகன் மகேஷ் இருவரும் சேர்ந்து மிளகாய் பொடியை அவரது கண்ணில் தூவினார்கள்.

இதில் ராம்குமார் நிலை தடுமாறி கீழே விழவும் அவரை இருவரும் சேர்ந்து சரமரியாக அருவாளால் வெட்டினார்கள். இதில் ராம்குமார் அதே இடத்தில் பரிதாமாக இறந்தார். பின்னர் இருவரும் மாரியம்மாள் வீட்டுக்கு சென்றனர். அங்கே வாசலில் நின்று கொண்டிருந்த மாரியம்மாள் மீதும் மிளகாய் பொடியை தூவி அவரையும் சரமரியாக அருவாளால் வெட்டினார்கள். இதில் மாரியம்மாள் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். பின்னர் இருவரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாராம், சப் இன்ஸ்பெக்டர்கள் கெங்கநாத பாண்டியன், சிவகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2பேர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தை தூத்துக்குடி டவுன் டிஎஸ்பி சத்யராஜ் பார்வையிட்டார்.

மேலும், இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து கணவன் மனைவியை கொலை செய்த முருகேசன் மற்றும் அவரது மகன் மகேஷ் இரு வரையும் தேடி வருகிறார்கள்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp