கோவையில் முதன் முறையாக பிரபல பாடகர் சங்கர் மகாதேவன் இசை நிகழ்ச்சி….!!
எஸ்.பி.பி.,சித்ரா,மனோ,என பிரபல பாடகர்களுடன் இணைந்து தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இசைக்கச்சேரிகளை ஒருங்கிணைத்த மௌனராகம் இசைக்குழு கோவையில் முதன் முறையாக சங்கர் மகாதேவனின் இசை நிகழ்ச்சியை வரும் ஏப்ரல் மாதம் நடத்த உள்ளது.
கோவை எஸ்.எஸ்.குளம் பகுதியில் உள்ள ஆதித்யா கல்லூரி திறந்த வெளி மைதானத்தில் நடைபெற உள்ள இந்நிகழ்ச்சி குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு ஆதித்யா கல்லூரி அரங்கில் நடைபெற்றது.இதில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களான மௌனராகம் முரளி,பாபு,பாஸ்கர் ஆகியோர் பேசினர்.ஏப்ரல் 8 ந்தேதி மாலை ஆறு மணிக்கு நடைபெற உள்ள இந்த இசை கச்சேரியில் பிரபல பாடகர் சங்கர் மகாதேவன் பாட இருப்பதாகவும்,இந்நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மற்றும் பல்வேறு இடங்களில் துவங்கி உள்ளதாக தெரிவித்தனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்திய அளவில் பிரபலமான சங்கர் மகாதேவன் கோவையில் முதல் முறையாக கலந்து கொள்ள உள்ள இந்நிகழ்ச்சியில் சுமார் 15,000 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தனர்…இதிலிருந்து பெறப்படும் தொகையில் ஒரு பகுதியை இசைக்கலைஞர்கள் நல நிதிக்கு வழங்க உள்ளதாகவும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
-சீனி போத்தனூர்.