சிங்கம்புணரி அருகே தனது 2 வயது குழந்தையுடன் பெண் மாயம்! காவல்துறை தீவிர விசாரணை!

சிங்கம்புணரி

சிங்கம்புணரி

சிங்கம்புணரி அருகே தனது 2 வயது குழந்தையுடன் பெண் மாயம்!
காவல்துறை தீவிர விசாரணை!

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், எஸ்.புதூர் ஒன்றியம் மேட்டாம்பட்டியைச் சேர்ந்தவர்கள் சுமதி(45) – பழனிச்சாமி தம்பதியினர். இவர்களது மகள் சரண்யா(26).

சரண்யாவை அதே ஊரைச் சேர்ந்த கமல் என்பவருக்கு சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளனர். கமல் மேலூரில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிலையில், இருதினங்கள் முன்பு குடும்பப் பிரச்சினை காரணமாக, சரண்யா தனது இரு வயது குழந்தையைத் தூக்கிக் கொண்டு நாகமங்கலம் அருகே சூரப்பட்டியில் உள்ள தனது பாட்டியின் வீட்டிற்குச் செல்வதாகக் கூறிச் சென்றுள்ளார்.

ஆனால் அங்கு சரண்யா வந்து சேரவில்லை என தகவல் தெரிந்ததை அடுத்து, அவரது தாயார் சுமதி இதுகுறித்து உலகம்பட்டி காவல்நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த உலகம்பட்டி காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் சேதுராமன் தீவிர விசாரணை செய்து வருகிறார்.

– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp