பாப்கார்னில் கரப்பான் பூச்சி : திருச்செந்தூரில் பிரபல திரையரங்கில் விற்பனை!!
திருச்செந்தூரில் உள்ள பிரபல தியேட்டரில் மதியம் ஷோ பார்க்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். பிற்பகல் இடைவேளையின் போது திருச்செந்தூரை சேர்ந்த மகாதேவி என்பவர் அங்குள்ள கேண்டீனில் பாப்கார்ன் வாங்கியுள்ளார். அதில் ஒரு பாப்கார்னில் கரப்பான்பூச்சி உயிருடன் இருப்பதைகண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இதுதொடர்பாக அங்குள்ள நிர்வாகத்திடம் முறையிட்டனர். இதனால் கேண்டின் பணியாளர்கள் புகார் தெரிவித்த பெண்ணிடம் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பாதியில் அவமானம் தாங்காமல் தியேட்டரை விட்டு வெளியேறினார். தற்போது பாப்கார்னில் கரப்பான் பூச்சி கிடந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகியது. தியேட்டரில விற்கப்படும் தரமற்ற உணவு பொருள் கூடுதல் விலைக்கு விற்க்கப்படுவதாகவும், தரமற்ற தின்பண்டங்கள் விற்கபபடுவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என எதிர்பார்க்கின்றனர். இதற்கிடையே தியேட்டர் கேண்டினில் விற்கப்பட்ட பாப்கார்னில் கரப்பான்பூச்சி கிடந்த சம்பவம் குறித்து அறிந்த திருச்செந்தூர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சக்தி முருகன் ஆய்வு மேற்கொண்டார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஶ்ரீவைகுண்டம் நிருபர் -முத்தரசு கோபி.