ராணுவ வீரர் பிரபு படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

வேலம்பட்டியில் ராணுவ வீரர் பிரபு படுகொலையை கண்டித்து கோவில்பட்டியில் முன்னாள் ராணுவ வீரர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த வேலம்பட்டி எம்ஜிஆர்நகரை சேர்ந்தவர் சின்னசாமி (50). இவர் நாகோஜனஹள்ளி பேரூராட்சி 1வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு கவுன்சிலராக இருந்து வருகிறார். அதேபகுதியில் பிரபாகரன்(30), பிரபு(29) ஆகியோர் வசித்தனர். சகோதரர்களான இருவரும் ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். பொது தண்ணீர் தொட்டி அருகே துணி துவைத்ததை கவுன்சிலர் சின்னசாமி கண்டித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பிரபாகரன் குடும்பத்துக்கும், சின்னசாமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கவுன்சிலர் சின்னசாமி தனது குடும்பத்தினருடன் சென்று ராணுவ வீரர்களான பிரபாகரன், பிரபு மற்றும் குடும்பத்தினரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பிரபாகரன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ராணுவ வீரரான பிரபு கடந்த 14ம் தேதி உயிரிழந்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் ராணுவ வீரர்கள் சங்க தலைவர் கேசவராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். முன்னாள் ராணுவ வீரர் ஜெயபிரகாஷ் நாராயணசாமி மற்றும் பலர் பேசினர். கயத்தாறு தாலுகா திருமலாபுரம் முன்னாள் ராணுவ வீரர் சுப்புராஜ் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதில் முன்னாள் ராணுவ வீரர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திக்காக ஒட்டப்பிடாரம் நிருபர்,

-முனியசாமி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp