வால்பாறையில் சமுதாய வளைகாப்பு விழா! அனைத்து எஸ்டேட் பகுதி கர்ப்பிணி பெண்களும் கலந்து கொண்டனர்!!
கோவை மாவட்டம் வால்பாறையில் சமூக நலத்துறை சார்பாக சமுதாய வளைகாப்பு விழா வால்பாறையில் நடைபெற்றது. வால்பாறை நகரை சுற்றிலும் உள்ள அனைத்து எஸ்டேட் பகுதியில் இருந்தும் வந்து திரளான கர்ப்பிணி பெண்கள் இதில் கலந்து கொண்டனர்.
வால்பாறையில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் 60க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சமூக நலத்துறை சார்பாக வளைகாப்பு விழா நடைபெற்றது இவ்விழாவில் தலைவர் எஸ். அழகு சுந்தரவல்லி செல்வம். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விழக்கு ஏற்றி வைத்து விழாவை துவக்கி வைத்தார் மற்றும் நகராட்சி ஆணையாளர் கே. பாலு. முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் செல்வம் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள் மற்றும் வால்பாறை எஸ்டேட் பகுதியில் உள்ள கர்ப்பிணி பெண்கள் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
விழாவில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் நிகழ்ச்சி முடிந்ததும் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்தவர்களுக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் கூறினார்கள் மேலும் தமிழக முதல்வருக்கு கர்ப்பிணி பெண்கள் நன்றி கூறினார்கள். பின்பு ஊட்டச்சத்து பொருட்கள் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. விழா முடிந்ததும் அனைவரும் இனிதே கிளம்பிச் சென்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.