19 அடியாக குறைந்தது சிறுவாணி அணை நீர்மட்டம்!!
கோவை சிறுவாணி அணையில் இருந்து கோவை மாநகர பகுதிக்கு குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக அணையின் ஒரு பகுதியில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த நீரேற்று நிலையத்தின் மூலம் கோவை மாநகராட்சிக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தற்போது அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழையின் அளவு வெகுவாக குறைந்துள்ளதால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு மிகவும் குறைந்துவிட்டது. இதன் காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு வெகுவாக குறைந்து விட்டது 50 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 19 அடியாக குறைந்து உள்ளது.
-அருண்குமார் கிணத்துக்கடவு.