ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பொருளீட்டு கடன் பெற விவசாயிகளுக்கு அழைப்பு !!!
வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் திருநெல்வேலி விற்பனைக்குழு சார்பில் தூத்துக்குடி மாவட்டம் குளத்தூரில் ” பண்ணை வாயில் விற்பனை வாரம்” ( Farm gate sale mela)பிரச்சாரம் நடைபெற்றது..
குழுக்கள் மூலம் வேளாண் விளை பொருட்களை வாங்கவும் விற்கவும் அதை முறைப்படுத்தவும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேசிய வேளாண் சந்தை ( இ- நாம்) மூலம் மறைமுக ஏலத்தில் உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் பங்கேற்று விளைபொருள்களை கொள்முதல் செய்கின்றனர்.
மறைமுக ஏல முறையின் மூலம் விவசாயிகளின் விளைபொருட்களான மிளகாய் வத்தல் , உளுந்து, சோளம் , கம்பு, பாசிபயறு, உள்ளிட்டவை இங்கு விற்பனை செய்யப்படுகிறது.
விவசாயிகள் இந்த முறையில் தங்களின் வேளாண் விளைபொருள்களை விற்பனை செய்யலாம். மேலும் தங்களின் வேளாண் விளை பொருள்களை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருப்பு வைத்து அதன் மீது பொருளீட்டு கடன் 5 சதவீத வட்டியில் அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரை பெறலாம். வியாபாரிகளும் 9 சதவீத வட்டியில் அதிகபட்சமாக ரூ.2 வரை கடன் பெற்றுக் கொள்ளலாம்,
விலை வீழ்ச்சி காலங்களில் விற்பனையை தவிர்ப்பதற்காக விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம், வியாபாரிகளுக்கு ரூ.2 லட்சம் பொருளீட்டு கடன் குறைந்த வட்டியில் வழங்கப்படுகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் உள்ள கிட்டங்கிகளில் விவசாயிகள் தங்கள் விலைபொருட்களை குவிண்டாலுக்கு நாளொன்றுக்கு பத்து பைசா வீதம் வாடகைக்கு இருப்பு வைத்து கொள்ளலாம்.
பண்ணை வாயில் விற்பனை( Farm gate sale)மூலமாக விவசாயிகளுக்கு போக்குவரத்து செலவினை மிச்சப்படுத்தவும், பேரம் பேசும் திறனை வளர்த்திடவும், விளைபொருட்களை இருந்த இடத்திலே பண்ணை வாயில் (Farm gate) மூலமாக விற்பனை செய்திட பிரச்சாரமகேட்டுக்கொள்ளப்பட்டது.
பண்ணை வாயில் விற்பனை( Farm gate sale) மூலமாக எளிதில் அழுகக்கூடிய காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்திட பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் விவசாயிகள் அருகிலுள்ள ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களை அணுகி பயனடையுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இப்பிரச்சாரத்தின் போது இணை இயக்குநர் (வே.வ) திரு. முருகப்பன், விற்பனைக்குழு செயலாளர் திருமதி எழில்,விற்பனைக்கூட கண்காணிப்பாளர்கள் திருமதி.அழகுலெட்சுமி, திரு.விஸ்வநாதன் திரு.கமல்ராஜ் திரு.தண்டாயுதபாணி மற்றும் வேளாண்மை அலுவலர் திரு.பாலமுருகன் திரு.ஆறுமுகத்துறை
ஆகியோர் பிரச்சாரம் மேற்கொண்டனர் இந்நிகழ்ச்சியில் குளத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமத்தை ஏராளமான விவசாயிகள் மற்றும் தூத்துக்குடி, விளாத்திகுளம், புதூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழுவினர் கலந்து கொண்டார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஒட்டப்பிடாரம் நிருபர்
-முனியசாமி.