ஓரின சேர்க்கைக்கு வற்புறுத்தியதால் தலையில் கல்லைப்போட்டு கொலை!!

ஓரின சேர்க்கை

ஓரின சேர்க்கைக்கு வற்புறுத்தியதால் தலையில் கல்லைப்போட்டு  கொலை!!

கேரளாவை சேர்ந்தவர் முகமது பாசில் (வயது28). இவர் துடியலூர் பகுதியில் வசித்து வருகிறார் இவர் பாட்டில் மற்றும் குப்பை சேகரிக்கும் தொழில் செய்து வந்தார்.

அதே பகுதியில் கேரளாவை சேர்ந்த ரமேஷ் (51) என்பவரும் தங்கி இருந்தார். அவர்கள் 2 பேரும் ஒரே மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் நண்பர்களாக பழகி வந்தனர்.  இவர்களுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

 

மேலும் அவர்கள் 2 பேரும் ஓரின சேர்க்கையி லும் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன் தினம் அவர்கள் 2 பேரும் சேர்ந்து மதுகுடித்தனர். அப்போது முகமது பாசில், ரமேசை ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக தெரிகிறது. அதற்கு ரமேஷ் மறுப்பு தெரிவித்து உள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ரமேஷ் சாலையோரம் கிடந்த கல்லை எடுத்து முகமதுபாசிலின் தலையில் போட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்த தகவலின் பேரில் துடியலூர் போலீசார் விரைந்து சென்று முகமது பாசிலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், ஓரின சேர்க்கைக்கு அழைத்ததால் ஆத்திரம் அடைந்த ரமேஷ், முகமது பாசிலின் தலையில் கல்லைப்போட்டு கொன்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் ரமேசை தேடி வந்தனர்.

இந்த நிலையில் ரமேஷ் தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டு துடியலூர் போலீசில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp