கோவில்பட்டியில் தேவேந்திரகுல வேளாளர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!!!!
கோவில்பட்டி இ.எஸ்.ஐ. மருத்துவமனை முன்பு பட்டியல் வெளியேற்ற இயக்கமும், கோவில்பட்டி வட்டார தேவேந்திர குல வேளாளர் சங்கமும் இணைந்து தேவேந்திரகுல வேளாளர் மக்களை பட்டியல் பிரிவில் இருந்து மாற்ற வலியுறுத்தி நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.
கடந்த அதிமுக ஆட்சியில் தேவேந்திரகுல வேளாளர் என்று அரசாணை வெளியிட்டார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள். பின்னர் ஆட்சி மாற்றத்தால் உங்கள் கோரிக்கை நிலுவையில் உள்ளது . இருந்தாலும் உங்கள் உணர்வுக்கு மதிப்பு அளித்து வருகின்ற சட்ட மன்ற கூட்டத்தில் இதற்கு சிறப்பு கவனம் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடம்பூர் ராஜி தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டத்தில், பா.ம.க. மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், பாண்டியனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் எஸ்.சீனிநாடார், பா.ஜனதா மாவட்ட பொறுப்பாளர் எல்.அய்யாத்துரை பாண்டியன், நாம் தமிழர் கட்சி பூ.பாண்டி, மூவேந்தர் மருதம் முன்னேற்ற கழக தலைவர் பி.அன்புராஜ் , பட்டியல் வெளியேற்ற இயக்கம் திருநெல்வேலி நந்தினி மள்ளத்தி மற்றும் பலர் பேசினர்.
இந்த நிகழ்ச்சிகளில் கோவில்பட்டி வட்டார பகுதிகளில் இருந்து 500 மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திக்காக
ஒட்டப்பிடாரம் நிருபர் -முனியசாமி.