சர்வதேச அளவிலான கபடி போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற கோவையை சேர்ந்த மாணவர்!!

சர்வதேச அளவிலான கபடி போட்டியில் இந்திய அணியில் கலந்து கொண்டு ஆட்ட நாயகன் விருது பெற்ற கோவையை சேர்ந்த மாணவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நேபாலில் கடந்த 23 முதல் 27ம் தேதி வரை சர்வதேச அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. இந்தியா சார்பில் பங்கேற்ற அணியில் கோவை கே.ஜி.கலை அறிவியல் கல்லூரியில் பயிலும் கோவையை சேர்ந்த ரியாஸ்கான் என்ற மாணவர் இடம்பெற்றிருந்தார். சர்வதேச அளவில் நடைபெற்ற இந்த கபடி போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற்றது. இதில் ஆட்டநாயகன் விருதையும் ரியாஸ்கான் பெற்றார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அதனைத் தொடர்ந்து கோவை திரும்பிய மாணவர் ரியாஸ்கானுக்கு கோவை ரயில் நிலையத்தில் அவரது குடும்பத்தினர், கல்லூரி நிர்வாகிகள், நண்பர்கள் ஆகியோர் இனிப்புகள் வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில் செய்தியாளர்களை சந்தித்த மாணவர் ரியாஸ்கான் பிரதமர், மத்திய விளையாட்டு துறை அமைச்சர், தமிழ்நாடு முதலமைச்சர், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற விரும்புவதாக தெரிவித்தார். மேலும் தனது YSP(Youth and Sports Promotion) சங்கத்திற்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

தமிழகத்தில் பல்வேறு கபடி வீரர்கள் உள்ளதாக கூறியுள்ள அவர் கபடி விளையாட்டை ஊக்குவிக்கும் வண்ணம் பல்வேறு கபடி மைதானங்களை உருவாக்கி தர வேண்டும் எனவும், கபடி வீரர்களுக்கு ஊக்கத்தொகை அளித்து உதவ அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

-சீனி, போத்தனூர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp