திருப்பூர் மாவட்டம் அமராவதி அணை அருகில் திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி வரை நெடுஞ்சாலை துறையின் சாலை வேலைகள் நடந்து வருகிறது. இதைப் பயன்படுத்தி செம்மண் கடத்துவதில் அரசியல்வாதிகளும் செங்கச் சூலை முதலாளிகளும் மறைமுகமாகவும் நேர்முகமாகவும் கடத்தி வருகிறார்கள்.
அதே போல் மண் எடுக்கக்கூடிய பகுதிகளில் மலை குன்றுகள் அதிகமாக இருக்கிறது. இது போன்ற பகுதிகளில் எடுக்கக் கூடாது என்று அரசு சட்டம் நிறைவேற்றி உள்ளது. அதையும் மீறி அதிக ஆழம் தோண்டி ஜேசிபி மூலம் நாள் ஒன்றுக்கு 200 வண்டி செம்மண் கடத்தி வருகிறார்கள் செம்மண் கடத்தவர்கள் மீது காவல்துறையும் நடவடிக்கை எடுப்பதில்லை.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அரசு அதிகாரிகளும் நடவடிக்கை எடுப்பதில்லை. முறையான ஆவணங்கள் இருந்தால் மட்டும் எடுத்து செல்ல அனுமதி கூற வேண்டும். அதேபோல உடுமலை தாலுக்காவிவசாயிகளுக்கு என்று மண் எடுத்து வருகிறார்கள். ஆனால் மண்ணு அருகில் இருக்கக்கூடிய செங்கச் சூலைகளுக்கு செல்கின்றது. இரவு பகல் பாராமல் டெம்பர் லாரிகள் மூலம் கடத்தி வருகிறார்கள். இவர்கள் மீது திருப்பூர் மாவட்ட கலெக்டர் அவர்கள் சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இப்பகுதி விவசாயிகளும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை.
-துல்கர்னி, உடுமலை.