தூத்துக்குடி மாவட்டத்தில் திடீர் மழை மக்கள் மகிழ்ச்சி!!!!
காற்றின் வேக மாறுபாடு காரணமாக தென் தமிழ்நாடு கடலோர மாவட்டங்களில் பிப் 27-28 தேதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. கடந்த நாள்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், தற்போது பெய்துள்ள மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசியது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி, திருச்செந்தூர், குலசேகரபட்டினம், சாத்தான்குளம் காயல்பட்டினம், விளாத்திகுளம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதுபோல் எட்டயபுரம், காடல்குடி, வைப்பாரு, கீழ அரசடி ஆகிய இடங்களில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. கயத்தாறு, மணியாச்சி, கடம்பூர், கழுகுமலை உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஒட்டப்பிடாரம் நிருபர் -முனியசாமி.