NALAIYA VARALARU
ஒட்டப்பிடாரத்தில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது!!!
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் உள்ள டி.எம்.பி மெக்குவாய் மேல்நிலைப்பள்ளியில் ஓட்டப்பிடாரம், ராஜன் கோவில், குலசேகர நல்லூர், பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சி மன்றம் மற்றும் ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பாக நேற்று இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.இலவச மருத்துவ முகாமினை ஒட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா தொடங்கி வைத்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த முகாமில் காது ,மூக்கு, தொண்டை , குடலிறக்கம்,மார்பகப் புற்றுநோய், சிறுநீரக பிரச்சனைகளுக்கு ஆலோசனை மற்றும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. ஒட்டப்பிடாரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
மேலும் இந்த முகாமில் அறுவை சிகிச்சைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 32பேர்களுக்கு இலவச அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இதில் ராஜன்கோவில் ஊராட்சி மன்ற தலைவர் அன்புராஜ் பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் கமலாதேவி யோகராஜ், குலசேகரநல்லூர் வேலாயுதசாமி மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக ஒட்டப்பிடாரம் நிருபர்,
-முனியசாமி.