ஒட்டப்பிடாரத்தில் வீரன் சுந்தரலிங்கம் 253வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்!

ஒட்டப்பிடாரத்தில்

NALAIYA VARALARU

ஒட்டப்பிடாரத்தில் வீரன் சுந்தரலிங்கம் 253வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்!

இந்தியாவின் முதல் தற்கொலை படைத்தளபதி சுதந்திரப் போராட்ட தியாகி வீரன் சுந்தரலிங்கம் பிறந்த நாள் விழா ஒட்டப்பிடாரம் அருகே கவர்னர்கிரி மணிமண்டபத்தில் நடைபெற்றது. அரசு விழாவாக தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் வட்டம் கவர்னர்கிரி ஊராட்சியில் சுதந்திரப் போராட்ட வீரர் வீரன் சுந்தரலிங்கம் 253 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அன்னாரது மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

காலையில் மணிமண்டபத்தில் வீரன் சுந்தரலிங்கம் திருவுருவச் சிலைக்கு பால் அபிஷேகம் நடைபெற்று. பின்னர் பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். அகில இந்திய மாவீரன் சுந்தரலிங்கம் பேரவை தலைவர் முருகன் ஜோதி பேரணி குறுக்குச்சாலையில் இருந்து மணிமண்டபம் வரை அமைதியாக நடைபெற்றது. ஜோதி பேரணியை M.C முருகேசன் பாண்டியன் அவர்கள் துவக்கி வைத்தார். இவ்விழாவில் ஒட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா கலந்து கொண்டார் .

தமிழ் நாடு அரசின் சார்பில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா, கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், மாவட்ட ஊராட்சித் தலைவர் அ.பிரம்மசக்தி, ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் எல்.ரமேஷ், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் சு.கனகரத்தினம், வீரன் சுந்தரலிங்கம் வாரிசு சிவ.பொன்ராஜ், ஒட்டப்பிடாரம் வட்டாட்சியர்கள் நிஷாந்தினி, தனி வட்டாச்சியர் செல்வகுமார்,வட்டார வளர்ச்சி அலுவலர் சிவ பலன் , ஒட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

ஒட்டப்பிடாரம் நிருபர்

-முனியசாமி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp