திருப்பூர் மக்கள் பீதி ..!! அடுத்தடுத்து மரணம்!!

மக்கள் பீதி

NALAIYA VARLARU

திருப்பூர் மக்கள் பீதி ..!! அடுத்தடுத்து மரணம்!!

தமிழகத்தில் சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னை, கோவை, சேலம், திருச்சி உள்ளிட்ட மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகாரித்து வருகிறது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 186 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா பிரிவில் 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் தூத்துக்குடியைச் சேர்ந்த பார்த்திபன் (55) என்பவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவர் ஏற்கனவே நுரையீரல் புற்றுநோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகிறார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இன்று காலையில் பார்த்திபனுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால், கொரோனா பாதிக்கப்பட்டு தூத்துக்குடியில் ஒருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், சற்றுமுன் திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழந்திருக்கிறார்.

ஒரே நாளில் தமிழ்நாட்டில் கொரோனாவிற்கு 2 பேர் உயிரிழந்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாளைய வரலாறு செய்திக்காக

-பாஷா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp