NALAIYA VARALARU
புதுக்கோட்டையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது! – மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு!!!
தூத்துக்குடி மாவட்டம் குமாரகிரி ஊராட்சியில் இன்று (19.04.2023) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தெரிவித்ததாவது: மக்கள் தொடர்பு முகாம் என்பது ஒவ்வொரு மாதமும் 2வது புதன்கிழமை ஒரு தாலுகாவில் உள்ள ஒரு ஊராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டு நடத்தப்படுவது வழக்கம். இம்முகாமில் மாவட்ட அளவிலான அலுவலர்கள் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டு மக்களிடம் கோரிக்கைகளைப் பெற்று அதற்கான தீர்வுகள் வழங்கப்படுகிறது. குமாரகிரி ஊராட்சியில் கடந்த வாரம் புதன்கிழமை நடைபெற வேண்டிய மக்கள் தொடர்பு முகாம் வேறு ஒரு அலுவல் காரணமாக இந்த வாரம் நான் நேரடியாக பங்கேற்று நடைபெறுகிறது.
மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட தலைமையிடத்தில் இருந்து தூரத்தில் உள்ள ஊராட்சிகளில்தான் நடத்தப்படும். ஆனால் மாவட்ட தலைமையிடத்திற்கு அருகில் உள்ள குமாரகிரி ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்படுவதற்கு முக்கிய காரணம் குமாரகிரி வளர்ந்து வரும் ஊராட்சியாகும். குமாரகிரி ஊராட்சிக்கு அருகில்தான் விமான நிலையம் இருக்கிறது. மேலும், தொழிற்பேட்டை வரவுள்ளது. எனவே இங்குள்ள மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய இந்த ஊராட்சியை தேர்ந்தெடுத்து இன்று நாங்கள் வந்துள்ளோம். நாங்கள் வருவதற்கு முன்பே பொதுமக்களிடம் 105 மனுக்கள் பெறப்பட்டது. இதில் 66 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள 39 மனுக்களுக்கு அடுத்து வரும் 2 வாரங்களுக்குள் தீர்வு காணப்படும்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஒவ்வொரு மாவட்ட அளவிலான துறையை சேர்ந்த தலைமை அலுவலர், துறை சார்பில் என்னென்ன நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது என்பது குறித்து அரங்கங்கள் அமைத்து நலத்திட்ட உதவிகள் பெறுவது தொடர்பாக தெரிவிப்பார்கள். குறிப்பாக குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மூலமாக குழந்தைகள், கர்ப்பிணி பெண்களுக்கு சத்தான உணவுகள் தொடர்பாகவும், சுகாதாரத்துறை மூலமாக பொதுமக்கள் டெங்கு, கொரோனா வராமல் எப்படி பாதுகாத்துக்கொள்வது, மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் பயனடைவது குறித்தும் அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தோட்டக்கலைத்துறை மூலம் உரங்கள் தொடர்பாகவும், கால்நடை பராமரிப்புத்துறை மூலம் கால்நடை வளர்ப்பு திட்டங்கள் குறித்தும் அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த முகாமில் தூத்துக்குடி சார் ஆட்சியர் கௌரவ்குமார், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய், மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல்காசிம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் விக்னேஷ், வேளாண் இணை இயக்குநர் பழனிவேலாயுதம், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பொற்செல்வன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உலகநாதன், வட்டாட்சியர்கள் செல்வக்குமார், ராஜசெல்வி (ச.பா.தி), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹெலன் பொன்மணி, வசந்தா, தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் வசுமதி அம்பாசங்கர், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜாக்ஷன்துரை (குமாரகிரி), ஆனந்தகுமார்(தளவாய்புரம்), அரிகிருஷ்ணன் (கூட்டுடன்காடு) மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், கிராம மக்கள் கலந்துகொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஒட்டப்பிடாரம் நிருபர்
-முனியசாமி.