NALAIYA VARALARU
புதுக்கோட்டை குமரகிரி கிராம ஊராட்சி செயலகம் கட்டிடம் கட்ட கடும் எதிர்ப்பு !!!
புதுக்கோட்டை குமரகிரி கிராம ஊராட்சி செயலகம் கட்டிடம் கட்ட கடும் எதிர்ப்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜகவின் எஸ்.டி அணி மாவட்டத் தலைவர் பால சந்திரபூபதி அவர்கள் புகார் மனு அளித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் குமரகிரி ஊராட்சியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் கட்டிடம் பழுதடைந்து தற்போது வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. அது மட்டுமன்றி குமரகிரி ஊராட்சி மன்ற அலுவல கட்டிடம் பழுதடைந்து உள்ளது. நமது தமிழக அரசின் சிறப்பு திட்டமான கிராம ஊராட்சி செயலகம் திட்டத்தின் மூலம் குமரகிரி கிராம நிர்வாக அலுவலகம், குமரகிரி ஊராட்சி அலுவலகம் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் ஓரு சிலர் தனி நபருக்கு பயன்படும் வகையில் மக்களின் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாத போக்குவரத்து வசதிகள் இல்லாத மற்றும் கிராம வளர்ச்சியில் தொலைநோக்கு பார்வை இல்லாமல் ஏழை எளிய மக்கள் வசதிக்கு அப்பாற்பட்டு உள்ள இடத்தை தேர்வு செய்தால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாக வேண்டும்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கிராம ஊராட்சி செயலகம் கட்டிடத்தை ஊருக்கு ஒதுக்கு புறமாக, ஊரின் மையப்பகுதியில் இருந்து மேலசுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் காட்டு பகுதியில் கட்டுவதற்கு ஊராட்சி நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது தெரியவருகிறது.
இதற்கு ஊர் பொதுமக்கள் தரப்பில் கடுமையான எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி கிராம ஊராட்சி செயலகம் கட்டிடத்தை கட்டுவதற்கு குமரகிரி புதுக்கோட்டை பகுதி பழுதடைந்த கிராம நிர்வாக அலுவலகம் அமைந்துள்ள இடத்தில் போதுமான இடவசதி உள்ளது.
மேற்கண்ட இந்த இடம் புதுக்கோட்டை மெயின் ரோட்டில், பொதுமக்கள் வந்து செல்லக்கூடிய போக்குவரத்து அடிப்படை வசதிகள் கொண்ட ஊராட்சியின் மையப்பகுதியில் உள்ளது. மேலும் மேற்கண்ட இடத்தின் அருகில் அரசுக்கு சொந்தமான நத்தம் நிலம் அதிகமாக உள்ளன. இந்த இடத்தின் அருகில் சார்பதிவாளர் அலுவலகம் கட்டிடம் உள்ளது. வாங்கி இ சேவை மையம் மாளிகை கடைகள் அனைத்து வசதிகளை கொண்ட குமரகிரி ஊராட்சி புதுக்கோட்டையில் கிராமத்தின் இந்த மையப்பகுதியில் கிராம ஊராட்சி செயலகம் கட்டிடத்தை கட்டினால் கிராம பொதுமக்களுக்கு வசதியாக அமையும்.
ஊராட்சி நிர்வாகம், பொதுமக்களின் நலனை கருத்திலும் கொள்ளாமல் ஊருக்கு ஒதுக்கு இடத்தில் கட்டிடத்தை கட்டுவதற்கு குமரகிரி ஊராட்சி மக்கள் விருப்பம் இல்லை. எனவே தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் குமரகிரி ஊராட்சி பொதுமக்கள் நலன் வாழ்வாதாரம் ஆகியவை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஓட்டப்பிடாரம் நிருபர்
-முனியசாமி.