சிறுபான்மை பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திடுக, அஸ்லம் பாஷா கண்டனம்…

சிறுபான்மை பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திடுக, அஸ்லம் பாஷா கண்டனம்…

கல்வி நிலையங்கள் மற்றும் பணியிடங்களில் சிறுபான்மை பாதுகாப்பை உறுதி செய்திடுக, சிறப்பு சட்டம் இயற்றிடுக. பெண்களின் மக்களை பிளவுபடுத்தும் பி.ஜே.பி. அரசியல் சதியை முறியடிப்போம் காங்கிரஸ் சிறுபான்மைத்துறை தலைவர் அஸ்லம் பாஷா கண்டனம். நாகை மாவட்டம், திருப்பூண்டி அரசு மருத்துவமனை இரவுப்பணி மருத்துவர் ஜன்னத் அவர்களை நள்ளிரவில் மருத்துவர் அறையில் இருந்த போது புவனேஸ்வர்ராம் என்பவர் வீடியோ எடுத்து மிரட்டியுள்ளார். ஆபாசமான வார்த்தைகளில் திட்டியுள்ளார். ஹீஜாப் அணிந்தால் எப்படி டாக்டர் என்று தெரியும். மத அடையாளத்தோடு எப்படி இருக்கலாம் என தகராறு செய்து அவரை பணி செய்யவிடாமல் தடுத்துள்ளார்.

இதையே பொட்டு வைத்து புடவை கட்டியோ, சுடிதார் அணிந்த இந்து மருத்துவர்களைப் பார்த்து இந்த நபர்கள் ஏன் கேள்வி எழுப்புவதில்லை. எந்த வகையிலாவது மக்களை பிறபுபடுத்தி வன்முறையைத் தூண்டி அரசியல் ஆதாயம் தேடப்பார்க்கிறது. பி.ஜே.பி. அவரவர் மதத்தை பின்பற்றுவதற்கும் வழிபாடு செய்வதற்கும் அரசியல் சட்டம் வகுத்தளித்த தனி நபர் சுதந்திரம். அதில் தலையிட யாருக்கும் எவ்வித உரிமையும் இல்லை. ஆனால் பி.ஜே.பி.யினர் கால் பதிக்க விரும்புகின்ற இடங்களில் முதலில் மதப் பிளவை ஏற்படுத்தி வன்முறையைத் தூண்டி வதந்திகளைப் பரப்பி பொய்களை தொடர்ந்து உரக்கக் கூவி அதை உண்மை போல் சித்தரித்து அதை மக்களை நம்ப வைத்து பெரும் கலவரத்தை உருவாக்குவது.

அதன் மூலம் தங்கள் அரசியலை வேருண்டச் செய்வது இதை பல பகுதிகளில் பரிச்சாத்த முறையில் பரிசோதனை செய்து அரசியல் ஆதாயம் அடைந்துள்ள நிலையில் அதையே தமிழ் நாட்டின் பிற பகுதிகளிலும் செய்ய திட்டம் தீட்டி அதற்கான கூலிப் படைகளை கட்சியில் சேர்த்து பொறுப்புகள் வழங்கி வருகிறது. அந்த வகையில் வன்முறையில் ஈடுபட்ட புவனேஷ்வர்ராம் பி.ஜே.பி. பின் விருந்தோம்பல் பிரிவு மாவட்ட தலைவர் இது போன்ற அரசியல் பிரிவு இந்தியாவில் எந்தக் கட்சியிலும் இருந்தது இல்லை. தேடப்படும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள், சமூக விரோதிகள், கூலிப்படையினர் இவர்களைக் கொண்டு ஒரு அரசியல் இயக்கம் பொது வெளியில் இயங்குவது நாட்டின் நலனுக்கும் எதிரானது. ஆகவே அரசு புலனாய்வுத்துறை தீவிரமாக செயல்பட்டு பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் முன் தேடிக் கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கல்வி நிலையங்களில் சிறுபான்மை மாணவிகளை அச்சுறுத்துவதன் மூலம் கல்வியை கெடுத்து விடலாம். பணி இடங்களில் அச்சுறுத்துவதன் மூலம் அரசு அதிகாரத்தில் பங்கெடுப்பதை தடுத்து விடலாம் என தனது பரிச்சாத்த முயற்சியாக இது போன்ற வன்முறைகளை நாடு முழுவதும் செய்ய திட்டமிட்டு செயல்பட்டு வருபவர்களை கண்காணித்து முளைபிலேயே கில்லி எறிய வேண்டும். அரசு சிறுபான்மை பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திட சிறப்பு சட்டங்களை இயற்ற வேண்டும்.

அறிக்கை:-

Dr.J.அஸ்லம் பாஷா.MABL
தலைவர்                                                                                                                                                                                      தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மைதுறை.

-MMH.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp