வாலிபரின் உடல் அழுகிய நிலையில் பிணமாக மீட்பு!! காவல்துறையினர் விசாரணை!!!

போத்தனூர் தனியார் கல்லூரி அருகே தலையில் காயத்துடன் வாலிபர் உடல் அழுகிய நிலையில் பிணமாக மீட்பு கொலை செய்யப்பட்டாரா போலீசார் விசாரணை கோவை சுந்தராபுரம்- மதுக்கரை இடையே மேம்பாலத்துக்கு கீழ் பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் வாலிபர் ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.

இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் போத்தனூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை ஆய்வு செய்தனர். அப்போது அவரது தலை மற்றும் இடுப்பு பகுதியில் பலத்த காயங்கள் இருந்தது. வாலிபரின் உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போத்தனூர் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டவர் போத்தனூர் அருகே உள்ள மைல்கல்லை சேர்ந்த வினித் என்ற ஆசிக் பிர்தவுஸ்(வயது22), என்பது தெரிய வந்தது. இவருக்கு திருமணம் முடிந்து 1வயதில் ஒரு குழந்தை உள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மேலும் இவர் வீடு உள் அலங்கார வேலை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை வினித் மது குடித்துவிட்டு போதையில் வீட்டுக்கு சென்றார். அவரை வீட்டில் உள்ளவர்கள் கண்டித்து உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த வினித் வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன் பின்னர் அவர் வீட்டிற்கு திரும்பி செல்லவில்லை என்பது தெரியவந்தது. இது குறித்து போத்தனூர் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து வினித்தை யாராவது அடித்து கொலை செய்து தண்டவாளம் அருகே வீசி சென்றார்களா?

அல்லது ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் போத்தனூர் போலீசார் நேற்று காலை அங்குள்ள தனியார் கல்லூரி அருகே கேட்பாராற்று நின்ற மோட்டார் சைக்கிளை மீட்டனர். விசாரணையில், அந்த மோட்டார் சைக்கிள் வினித் மோட்டார் சைக்கிள் என்பது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து போத்தனூர் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp