கோவை மாவட்டம் வால்பாறையில் நகராட்சி கால்பந்து மைதானம் உள்ளது.இந்த கால்பந்து மைதானத்தில் சிறுவர் முதல் பெரியவர் வரை தினமும் 300க்கும் மேற்பட்டவர்கள் ஆர்வமுடன் கால்பந்து விளையாட்டு பயிற்சிக்காக வருகிறார்கள்.
இவ்வாறு பயிற்சிக்காக வரும் இளம் வீரர் வீராங்கனைகளை தலைமை ஆசிரியர் மாசாணி சரவணன் ஹரி மற்றும் வின்சென்ட் ஆகியோ நால்வரும் காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும் மாலை 3:30 மணி முதல் 5:30 மணி வரையிலும் கால்பந்து விளையாட்டு பயிற்சி அளிக்கிறார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனால் வால்பாறை பகுதியைச் சேர்ந்த இளம் வயதினருக்கு கால்பந்து விளையாட்டை கற்றுக்கொள்ள மிகச் சிறந்த வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். இதன் மூலம் மிகச் சிறந்த கால்பந்து விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் உருவாகி வால்பாறை நகருக்கு பெருமை சேர்ப்பார்கள்.
தினமும் ஆர்வத்துடன் கால்பந்து விளையாட்டு பயிற்சியில் கலந்து கொள்ள வரும் இளம் விளையாட்டு வீரர்களையும் வீராங்கனைகளையும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சி ஆசிரியர்களையும் வால்பாறை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் வாகன ஓட்டுநர்கள் மற்றும் வியாபார பெருமக்கள் ஆகியோர் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.