கோவை மாவட்டம் வால்பாறையில் தற்பொழுது கோடை விழா தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனை காண தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். சென்னை பேட்டை பகுதியிலிருந்து வால்பாறைக்கு சுற்றுப்பயணம் வந்து சுற்றுலா தளங்கள் மற்றும் கோடை விழா பார்த்து விட்டு திரும்பும் வழியில் ஐந்தாவது கொண்டை ஊசி வளைவில் பிரேக் பிரிக்காமல் அவர்கள் வந்த சுற்றுலா வாகனம் விபத்துக்குள்ளானது இதில் பயணித்த 18 நபர்களும் சிறிய காயத்துடன் உயிர் தப்பினார்கள் தகவல் கிடைத்த உடனே அப்பகுதிக்கு விரைந்து சென்ற 108 அவசர சிகிச்சை வாகனம் விபத்தினால் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதியில் சாலையின் இருபுறமும் சிறிது நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. நிலைமை சீரானதும் போக்குவரத்து தொடங்கியது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்தி களுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.