கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் அருகே உள்ள கட்டப்பனை என்ற பகுதியில் தொல்லை அதிகரித்து வருவதாக காவல் நிலையத்தில் அப்பகுதி பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். இந்தியாவின் தெற்கு பகுதியான கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு முதல் நிலை வேலைக்காக பல வட மாநிலத்தவர்கள் வந்து தங்களுடைய வாழ்வாதாரத்தை தேடி கொள்வது வழக்கமாக உள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அதே சமயத்தில் அதிகமான வடமாநிலத்தவர்கள் வந்து ஒரு இடத்தில் இருக்கும் போது ஒன்று சேர்ந்து அங்கு வருபவர்களை துன்புறுத்துவதும் மதுபானம் குடித்து விட்டு வாகன நிறுத்தபகுதிகளில் வாந்தி எடுத்து அங்கே வரும் நபர்களை தகாத வார்த்தைகளில் திட்டுவதும் வழக்கமாக உள்ளது.
அதே சம்பவம் கட்டப்பனை என்ற பகுதியில் வட மாநிலத்தவர்கள் வந்து குழுவாக சேர்ந்து கொண்டு அப்பகுதியில் வசிக்கும் மக்களை புண்படுத்தவதாகவும் கேட்கும் பொழுது அவர்களை மிரட்டுவதாகவும் அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.இதை குறித்து நடவடிக்கை எடுப்பதாக அப்பகுதி காவல்துறை அறிவித்துள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணார்.