வால்பாறை பிர்லா நீர்வீழ்ச்சியில் விழுந்த இளைஞரின் உடல் 5நாட்களுக்கு பிறகு கண்டெடுக்க பட்டது !!!
கோவை மாவட்டம் வால்பாறைக்கு கடந்த 5 நாட்களுக்கு முன் கோவையை சேர்ந்த சாகர் (வயது 21) என்பவர் தனது காதலியுடன் சுற்றி பார்க்க வந்தார். அப்போது வால்பாறை அருகே உள்ள பிர்லா அருவியில் காதலியுடன் குளித்து கொண்டிருந்த போது கால் வழுக்கி நீரில் மூழ்கினார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அப்போது அந்த பெண் அருகில் உள்ளவர்களின் உதவி கேட்டு காவல் துறை மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து தேடி வந்தனர். பாறை இடுக்கில் சிக்கிய வாலிபரை தேடி கிடைக்காத நிலையில் 5 வது நாளன்று இறந்த சாகர் உடல் தண்ணீரில் மிதப்பதாக தகவல் அறிந்து காவல் துறையினர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடம் சென்று உடலை கைப்பற்றி உடற் கூறு ஆய்வுக்காக வால்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்க பட்டுள்ளது.
இது குறித்து வால்பாறை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம் பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி. ராஜேந்திரன்.