கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் – காரமடை ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் 15 வயது சிறுவன். இவர் காரமடை செல்வதற்காக தனியார் பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது பஸ்சில் கூட்டம் அதிகம் இருந்தது. இதனால் சிறுவன் பேருந்தின் படிக்கட்டில் நின்றதாக தெரிகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் அந்த பேருந்து சாலை வளைவில் திரும்பியபோது சிறுவன் படிக்கட்டில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார், இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த காரமடை சப்இன்ஸ்பெக்டர் தங்கவேல் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த சிறுவனை மீட்டு காரமடை மருத்துவமனையில் சேர்த்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் பஸ் டிரைவர் கருப்பசாமியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.