வால்பாறை சோலையார் அணை அரசு பள்ளியின் அவல நிலை!!!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சோலையார் அணை பகுதியில் அரசு பள்ளி இயங்கி வருகிறது. பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கப்படுகிறது.  தற்பொழுது வால்பாறை பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக நீர்நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதே போன்று சோலையார் அணைப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக சோலையார் அணை அரசு பள்ளியின் வளாகம் முழுவதும் தண்ணீர் தேங்கியது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த சூழ்நிலையில் தண்ணீர் வடிந்தாலும் பள்ளி வளாகம் முழுவதும் சேரும் சகதியும் ஆக காணப்படுகிறது. இதனால் பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் பள்ளிக்குள் செல்வதற்கு மிகவும் சிரமப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நடப்பதற்கு ஏதுவாக கற்களை போட்டு அதன் மீது நடந்து சென்று வரும் அவல நிலையில் உள்ளனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று பள்ளி வளாகத்தை ஆய்வு மேற்கொண்டு மீண்டும் இதுபோன்ற சூழ்நிலை ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க அப்பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp