எப்போதும் வென்றான் கிராமத்தில் புதிய நியாய விலை கடை திறப்பு விழா!!!

எப்போதும் வென்றான் கிராமத்தில் புதிய நியாய விலை கடை திறப்பு விழா!!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட எப்போது வென்றான் கிராமத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய நியாய விலை கடையை கனிமொழி கருணாநிதி எம்பி அவர்கள் திறந்து வைத்தார்.

எப்போதும் வென்றான் கிராமத்தில் மக்கள் தேவையே கருத்தில் கொண்டு புதிதாக ஓட்டப்பிடாரம் யூனியன் உட்பட்டு விளாத்திகுளம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 15 லட்சம் மதிப்பில் அவர்கள் புதிதாக நியாய விலை கடையை அமைத்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

முதலில் கனிமொழி கருணாநிதி எம்பி அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. ரிப்பன் வெட்டி கடையை திறந்து வைத்தார் பின்னர் மக்களின் குறைகளை கேட்டு அறிந்து மனுக்களை பெற்றார் , இரண்டு மரக்கன்றுகளை குழந்தைகளோடு சேர்ந்து நட்டினார்.

இந்த விழாவில் கூடுதல் ஆணையர் தாக்கரே ஞானதேவ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் அவர்கள், ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் அவர்கள், ஒட்டப்பிடாரம் ஒன்றிய பெருந்தலைவர் காசிவிஸ்வநாதன் அவர்கள், ஒட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி ஆணையர் சிவபாலன் அவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ் அவர்கள் , வட்டாட்சியர் சுரேஷ் , துணை வட்டாட்சியர் ஸ்டாலின் அவர்கள், வட்ட வழங்கல் அதிகாரி கருப்பசாமி அவர்கள், எப்போதும் வென்றான் ஒன்றிய கவுன்சில் வெள்ளைச்சாமி, ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் இராதாகிருஷ்ணன் பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஒட்டப்பிடாரம் .

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp