கோவையில் சாலையில் 10 நாட்களுக்கு மேலாக வாகனங்களை நிறுத்திச் சென்றால், அது பிடித்துச் செல்லப்படும் எனக் காவல் துறை தரப்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் நேற்று முன் தினம் வின்சென்ட் சாலையில் கார் ஒன்று ஒரு வாரத்திற்கு மேல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனைக் காவலர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். கார் நிறுத்தி வைக்கப்பட்டதற்கான சரியான விளக்கம் உரிமையாளர் கொடுத்த பிறகே, அவர்களிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்கள் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பது மட்டும் இல்லாமல், மக்களைப் பயமுறுத்தும் வகையிலும் இருப்பதால் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க முடிவு செய்து உள்ளனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.