அண்ணாமலைக்கு 2024 தேர்தலுக்குப் பிறகு அதிமுகவின் செல்வாக்கு தெரியவரும்! -கடம்பூர் ராஜூ பேச்சு.!!!

அண்ணாமலைக்கு 2024 தேர்தலுக்குப் பிறகு அதிமுகவின் செல்வாக்கு தெரியவரும் என புதியம்புத்தூர் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் கடம்பூர் ராஜூ  பேச்சு.!!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் புதியம்புத்தூரில் தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக பூத் கமிட்டி அமைக்கும் பணியை முன்னாள் அமைச்சா் கடம்பூர் ராஜூ அவர்கள் ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினாா்.

வரும் மக்களவைத் தோ்தலை முன்னிட்டு அதிமுக சாா்பில் ஒட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதியில் பகுதிகளில் உள்ள இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை, மகளிா் அணி, தகவல் தொழில்நுட்பக் அணி ஆகியவை சாா்பில் பூத் கமிட்டி அமைக்கும் பணி ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றியம் செயலாளர் மோகன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது .

19 பேர் கொண்ட ஒரு பூத் கமிட்டி அமைக்கப்படுகிறது. அதில், இளைஞர், இளம்பெண் பாசறை மற்றும் மகளிரணியைச் சேர்ந்த தலா 5 பேர், தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்த 2 பேர் கட்டாயம் இடம்பெற வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே பூத் கமிட்டி உறுப்பினராக இருக்க வேண்டும். ஏற்கெனவே உள்ள நிர்வாகிகள் பூத் கமிட்டியில் இடம்பெறக்கூடாது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கூட்டத்தில் கடம்பூர் ராஜூ அவர்கள் பேசியது:

கூட்டணியிலிருந்து அதிமுக விலகியதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய பதிலுக்கு 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவின் செல்வாக்கு அவர்களுக்கு தெரிய வரும் அதிமுக பொதுச்செயலாளர் சரியான முடிவு எடுத்துள்ளார் , அடுத்த வாரத்தில் பொதுச்செயலாளர் நேரடியாக ஆய்வுக்கு தூத்துக்குடி வருகிறார். தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது தேர்தலில் சொன்ன ஒரு வாக்குறுதி கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை மகளிர்க்கு ஆயிரம் ரூபாய் அதில் கூட தகுதி நிர்ணயம் செய்து ஏமாற்றுகிறது விடியல் அரசு என பேசினார்.

இந்நிகழ்வில் விளாத்திக்குளம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் அவர்கள், ஒட்டப்பிடாரம் ஒன்றிய கவுன்சிலர் வீரபாண்டி கோபி என்ற அழகிரி அவர்கள் , கருங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் இலட்சுமணபெருமாள் அவர்கள் , தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜவஹர் அவர்கள், கோவில்பட்டி நகர் மன்ற உறுப்பினர் கவியரசன் அவர்கள் , மாவட்ட மாணவர் அணி துணை செயலாளர் SR சின்னத்துரை அவர்கள் , மாணவரணி ஒன்றிய செயலாளர் தினேஷ் அவர்கள் , அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் MS கண்ணன் அவர்கள் , தகவல் தொழில்நுட்பக் அணி ராஜேஸ் அவர்கள், வழக்கறிஞர் பரமசிவன் அவர்கள், ஒன்றிய துணை செயலாளர் APC ஆதிலிங்கம் அவர்கள் மற்றும் நிர்வாகிகள் பூத் கமிட்டி முகவர்கள் ,மூத்த தொண்டர்கள் , மகளிரணியினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

ஒட்டப்பிடாரம் நிருபர் முனியசாமி.

 

 

 

 

 

 

 

 

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp